'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

சசிகுமார் இயக்கத்தில் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து 15 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் சுப்பிரமணியபுரம். 15 வருடங்களுக்கு முன்பு இப்படம் வெளிவந்த போது புதுமுக இயக்குனர், புதுமுக கதாநாயகன் என அதற்கு சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. ஆனால் படம் வெளிவந்த பின்பு விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைத்து வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது.
புதிய படங்களுக்கு காலை சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது போல 'சுப்ரமணியபுரம்' படத்திற்கும் நாளை காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சி நடைபெற உள்ளது. இப்படி ஒரு சிறப்புக் காட்சி நடைபெறுவதற்கு, படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“படம் வெளிவந்த போது எங்களுக்கு சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. காலை காட்சியாக படத்தைப் பார்க்க வேண்டும் என நினைத்த எங்களுக்கு அப்போது ஏமாற்றமே கிடைத்தது. ஆனால் 15 வருடங்களுக்குப் பிறகு நாளை படம் மறுபடியும் வெளியாகும் போது காலை 8 மணி காட்சிக்கு படத்தைத் திரையிடுவது மகிழ்ச்சியை தந்துள்ளது. அப்படி ஒரு மரியாதையை 'சுப்பிரமணியபுரம்' திரைப்படம் ஏற்படுத்திக் கொடுத்ததே இதற்குக் காரணம்,” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
நாளை காலை சென்னை, கமலா தியேட்டரில் நடைபெறவுள்ள சிறப்பு காட்சிக்கு படக் குழுவினர் கலந்து கொள்ள உள்ளார்கள்.




