போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

சசிகுமார் இயக்கத்தில் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து 15 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் சுப்பிரமணியபுரம். 15 வருடங்களுக்கு முன்பு இப்படம் வெளிவந்த போது புதுமுக இயக்குனர், புதுமுக கதாநாயகன் என அதற்கு சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. ஆனால் படம் வெளிவந்த பின்பு விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைத்து வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது.
புதிய படங்களுக்கு காலை சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது போல 'சுப்ரமணியபுரம்' படத்திற்கும் நாளை காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சி நடைபெற உள்ளது. இப்படி ஒரு சிறப்புக் காட்சி நடைபெறுவதற்கு, படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“படம் வெளிவந்த போது எங்களுக்கு சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. காலை காட்சியாக படத்தைப் பார்க்க வேண்டும் என நினைத்த எங்களுக்கு அப்போது ஏமாற்றமே கிடைத்தது. ஆனால் 15 வருடங்களுக்குப் பிறகு நாளை படம் மறுபடியும் வெளியாகும் போது காலை 8 மணி காட்சிக்கு படத்தைத் திரையிடுவது மகிழ்ச்சியை தந்துள்ளது. அப்படி ஒரு மரியாதையை 'சுப்பிரமணியபுரம்' திரைப்படம் ஏற்படுத்திக் கொடுத்ததே இதற்குக் காரணம்,” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
நாளை காலை சென்னை, கமலா தியேட்டரில் நடைபெறவுள்ள சிறப்பு காட்சிக்கு படக் குழுவினர் கலந்து கொள்ள உள்ளார்கள்.