பராசக்தி படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க வேண்டியது : சுதா | சுந்தர் சி, விஷால் படத்திற்கு ‛புருஷன்' என தலைப்பு | ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் | ‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இந்த படம் செம்மர கடத்தலை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருந்தது. புஷ்பா தி ரைஸ் என்ற பெயரில் வெளியான இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அவரது இசையில் உருவான ஸ்ரீ வள்ளி மற்றும் ஊ சொல்றியா மாமா போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அதே கூட்டணியில் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் பாகத்திற்கு புஷ்பா தி ரூல் என்று டைட்டில் வைத்திருக்கும் இயக்குனர் சுகுமார், தற்போது 40 சதவீதம் படப்பிடிப்பை முடித்து விட்டதாகவும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.