இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இந்த படம் செம்மர கடத்தலை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருந்தது. புஷ்பா தி ரைஸ் என்ற பெயரில் வெளியான இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அவரது இசையில் உருவான ஸ்ரீ வள்ளி மற்றும் ஊ சொல்றியா மாமா போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அதே கூட்டணியில் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் பாகத்திற்கு புஷ்பா தி ரூல் என்று டைட்டில் வைத்திருக்கும் இயக்குனர் சுகுமார், தற்போது 40 சதவீதம் படப்பிடிப்பை முடித்து விட்டதாகவும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.




