'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் | 50 லட்சம் சம்பளத்தை விட்டு இலங்கை படத்தில் நடித்த டி.ஜே .பானு | கார்த்திக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி? | 'நடிகர்கள் உண்மை ஹீரோக்கள் அல்ல' : நடிகர் சூரி வெளிப்படை | ‛பெத்தி' ஓடிடி விற்பனை எவ்வளவு | 7 வருடங்களுக்குப் பிறகு தேவ் பட இயக்குனருக்கு கிடைத்த வாய்ப்பு! | ரஜினி - கமல் இணையும் படம்: இன்று அறிவிப்பு வெளியாகிறது? | தனுஷ் 55 படப்பிடிப்பு நாளை முதல் துவங்குகிறது | டாக்சிக் டீசர் நாளை வெளியாகிறது |

சின்னத்திரை பிரபலமான அனிதா சம்பத், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி கலக்கினார். தற்போது திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் அவர், மாடலிங்கும் செய்து வருகிறார். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத், தனது 18 வருட சென்ட்டிமெண்ட் குறித்த பதிவை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியமான தருணங்களில் ஒன்று பூப்படைவது. அவ்வாறு அனிதா சம்பத் பூப்படைந்த போது சடங்கு நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட புடவையை அனிதா பத்திரமாக பாதுகாத்து வருகிறார். தற்போது அந்த புடவையை கட்டி போஸ் கொடுத்துள்ள அனிதா, சடங்கு நிகழ்ச்சியின் போது சிறுவயதாக அதே புடவையுடன் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டு, 'என்னுடைய முதல் மற்றும் ஸ்பெஷலான புடவை' என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.




