சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
தெலுங்கில் சாய் ராஜேஷ் இயக்கத்தில், ஆனந்த் தேவரகொண்டா, விராஜ் அஷ்வின், வைஷ்ணவி சைதன்யா மற்றும் பலர் நடிக்க இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜுலை 14ம் தேதி வெளிவந்த படம் 'பேபி'. சுமார் 10 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் 70 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
குடிசைப் பகுதியில் வாழும் ஆனந்த், வைஷ்ணவி இருவரும் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே காதலிக்கிறார்கள். ஆனந்த் பெயில் ஆகிப் போனதால் ஆட்டோ ஓட்ட ஆரம்பிக்கிறார். வைஷ்ணவி கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறார். கல்லூரி வாழ்க்கையில் வைஷ்ணவிக்கு விராஜ் என்ற புதிய நண்பர் கிடைக்கிறார். அதன்பிறகு மூவரது வாழ்க்கையிலும் பெரும் திருப்பம் ஏற்படுகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை.
இந்தப் படத்தின் தமிழ், ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்க தற்போது கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். உரிமையை விற்றுவிடலாமா அல்லது அந்த மொழிகளில் தாங்களே தயாரிக்கலாமா என தெலுங்கு படத்தைத் தயாரித்துள்ள நிறுவனம் யோசித்துக் கொண்டிருக்கிறதாம்.