மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'காவாலா', இரண்டாவது சிங்கிளான 'ஹூக்கும்' ஆகிய பாடல்கள் ஏற்கெனவே வெளியாகிய நிலையில் நேற்று மூன்றாவது சிங்கிளான 'ஜூஜூபி' பாடல் வெளியானது.
இரண்டாவது பாடலான 'ஹூக்கும்' பாடலில், “தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா”, “உன் அலும்ப பார்த்தவன்”, “இவன் பேர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு,” போன்ற வரிகள் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தின. ரஜினிகாந்தின் 'சூப்பர் ஸ்டார்' பட்டத்திற்கு ஆசைப்படும் நடிகர்களை விமர்சித்து அந்தப் பாடல் எழுதப்பட்டது என விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக விஜய் ரசிகர்கள் கோபமடைய சமூக வலைத்தளங்களில் வார்த்தை மோதல்கள் ஆரம்பமானது.
ரஜினிகாந்தின் வசூல் சாதனைகளை முறியடிக்கும் ஒரே நடிகர் விஜய், விஜய் தான் தமிழ் சினிமாவில் நம்பர் 1 என விஜய்யின் ரசிகர்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர். அடுத்து நேற்று வெளியான மூன்றாவது பாடலான 'ஜூஜூபி' பாடலில் இடம் பெற்றுள்ள “பகையாகிப் போனா பலியாவ வீணா”, “இவன் ரூட்டே வேறு,”, “கரண்ட்டுல கைய வச்சிபுட்ட, அது தொட்ட உடனே தூக்காமதான் விடுமா உன்னைய,”, “புலிக்கே பசிய தூண்டிபுட்டே அது ரத்தக்காவு வாங்காமத்தான் விடுமா உன்னைய,” ஆகிய வரிகள் யாரை “ஜூஜூபி” என நினைத்து எழுதப்பட்டது என்பது இப்போது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.
இதனால், நாளை 'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் என்ன பேசப் போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.