தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சந்தானம். அவரை தான் நடித்த காதல் அழிவதில்லை என்ற படத்தில் காமெடியனாக நடிக்க வைத்தார் சிம்பு. அதன் பிறகு அவர்கள் மன்மதன், வல்லவன், வானம், ஒஸ்தி போன்ற படங்களிலும் இணைந்து நடித்தார்கள். மேலும், சமீப காலமாக காமெடியை ஓரங்கட்டிவிட்டு ஹீரோ டிராக்கில் பயணித்துக்கொண்டிருக்கிறார் சந்தானம். தற்போது அவர் நடித்துள்ள ‛டிடி ரிட்டன்ஸ்' என்ற படம் வருகிற ஜூலை 28ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது அவர் தீவிரமடைந்திருக்கிறார்.
இந்நிலையில் சிம்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், சிம்புவுக்கு எப்போதுமே கடவுள் நம்பிக்கை அதிகம். அதிலும் சமீபகாலமாக ஆன்மிக புத்தகங்களை அதிகமாக படிக்கிறார். இந்த அளவுக்கு அவர் ஆன்மிகத்தில் தீவிரமாகி விடுவார் என்று நானே எதிர்பார்க்கவில்லை. திருவண்ணாமலைக்கு அடிக்கடி சென்று சித்தர்களை சந்தித்து விட்டு வருகிறார். முன்பெல்லாம் நாங்கள் மீட் பண்ணிக் கொண்டால், ஜாலியாக பேசிக் கொண்டிருப்போம். ஆனால் இப்போது அவர் முழுக்க முழுக்க ஆன்மிகத்தை பற்றி மட்டுமே பேசுகிறார். அவரது பயணம் முழு ஆன்மிக பயணமாக மாறி இருக்கிறது என்கிறார் சந்தானம்.