ஓராண்டாக நடந்த 'அமரன்' படப்பிடிப்பு நிறைவு : விரைவில் ரிலீஸ் அறிவிப்பு | இன்றும் டிரெண்ட்டில் நாட்டாமை ‛மிக்சர்' மாமா : யார் இவர்... - கேஎஸ் ரவிக்குமார் உடைத்த ரகசியம் | 27 ஆண்டுகளுக்கு பிறகு கஜோலுடன் இணையும் பிரபுதேவா | நேற்று 'மெய்யழகன்', இன்று 'வா வாத்தியார்' - கார்த்தி படங்களின் அப்டேட் | அமரன் படக்குழுவுக்கு பிரியாணி விருந்து அளித்த சிவகார்த்திகேயன் | மீண்டும் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா | சிரஞ்சீவி படத்தில் இத்தனை இளம் நடிகைகளா? | தள்ளிப்போகும் தனி ஒருவன் 2? | ஜூலை மாதத்தில் துவங்கும் கலகலப்பு 3 படப்பிடிப்பு | தந்தையின் நண்பர்கள் புகைப்படம் பகிர்ந்து மம்முட்டி படத்திற்கு வாழ்த்து கூறிய சிபிராஜ் |
ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த பேச்சிலர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யா பாரதி. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தாயாருடன் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அதையடுத்து கோயிலுக்கு வெளியே வந்து அம்மாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் திவ்யா பாரதி. அதில் புடவை கெட்டப்பில், கையில் பூக்கள் நிறைந்த தாம்பூலத்துடன் மங்களகரமாக அவர் நிற்பதை பார்த்த ரசிகர்கள், ஒன்பது லட்சம் லைக்ஸ் மற்றும் அவர் அழகை வர்ணித்து பலவிதமான கமெண்டுகளை கொடுத்து வருகிறார்கள்.