அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படுவது செவாலியே விருதாகும். இந்த விருதை ஏற்கெனவே சிவாஜி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரையுலக ஆளுமைகள் பெற்றிருக்கிறார்கள். இந்த வரிசையில் தற்போது பிரபல கர்நாடக இசை பாடகி அருணா சாய்ராம் செவாலியே விருது பெற்றுள்ளார். இந்தியா - பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக அருணா சாய்ராம் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக இசை உலகின் 'ராக் ஸ்டார்' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அருணா சாய்ராம் அவ்வப்போது திரைப்பட பாடல்களையும் பாடி உள்ளார். கடைசியாக ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' படத்தில் பாடியிருந்தார். பத்மஸ்ரீ, சங்கீத கலாநிதி உள்ளிட்ட விருதுகளை இதுவரை பெற்றுள்ளார் அருணா சாய்ராம்.
“நான் நடிகர் சிவாஜி கணேசனின் பெரிய ரசிகை; அவரது படங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறேன். அவர் பெற்ற விருதை நானும் பெற்றதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அதை கவுரவமாக கருதுகிறேன். எனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.