நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பிரபல கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராம் (70). கடந்த 50 ஆண்டுகளாக பல நாடுகளில், பல மேடை கச்சேரிகளில் பாடி வருகிறார். மத்திய அரசின் பத்மஸ்ரீ, மாநில அரசுகளின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். சங்கீத நாடக அகாடமியின் துணை தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
இந்நிலையில் இசையில் இவரது திறமையை கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலிய விருதை வழங்குவதாக அறிவித்துள்ளார். பாடும் திறமைக்காக மட்டுமல்லாமல், இந்திய - பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
இதுபற்றி அருணா சாய்ராம் கூறுகையில், ‛‛இதுபோன்ற உயரிய விருது பெறுவதில் மகிழ்ச்சி. நான் செய்யும் பணியை மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான கூடுதல் பொறுப்பையும் இந்த விருது வழங்குகிறது. பிரான்ஸ் அரசுக்கு நன்றி'' என்றார்.