நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
பிரபல கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராம் (70). கடந்த 50 ஆண்டுகளாக பல நாடுகளில், பல மேடை கச்சேரிகளில் பாடி வருகிறார். மத்திய அரசின் பத்மஸ்ரீ, மாநில அரசுகளின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். சங்கீத நாடக அகாடமியின் துணை தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
இந்நிலையில் இசையில் இவரது திறமையை கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலிய விருதை வழங்குவதாக அறிவித்துள்ளார். பாடும் திறமைக்காக மட்டுமல்லாமல், இந்திய - பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
இதுபற்றி அருணா சாய்ராம் கூறுகையில், ‛‛இதுபோன்ற உயரிய விருது பெறுவதில் மகிழ்ச்சி. நான் செய்யும் பணியை மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான கூடுதல் பொறுப்பையும் இந்த விருது வழங்குகிறது. பிரான்ஸ் அரசுக்கு நன்றி'' என்றார்.