இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

எதிர்நீச்சல் தொடர் மக்களின் பேவரைட்டாக இருந்த போதிலும், ஆதிரை - கரிகாலன் திருமண டிராக் தான் டிஆர்பியில் முதலிடத்தை வாங்கிக் கொடுத்துள்ளது. இனி வரும் எபிசோடுகளில் ஆதிரையின் கதாபாத்திரம் இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கதாபாத்திரத்தில் சத்யா தேவராஜன் என்பவர் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சில சீரியல்களில் நடித்திருந்தாலும், அந்த தொடர்களில் அவரது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், எதிர்நீச்சல் தொடரில் நடிப்பது குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்த சத்யா, ஆரம்பத்தில் எதிர்நீச்சல் தொடர் வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்ததாகவும், அதன்பின் கதை கேட்ட பிறகு தான் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும், எதிர்நீச்சல் தொடரில் கிடைத்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்திருந்தால், இந்த உலகில் தன்னை விட பெரிய முட்டாள் யாருமே இருந்திருக்க மாட்டார்கள் என்றும் நெகிழ்ந்து கூறியுள்ளார்.