ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
தியேட்டர்களில் தற்போது தனி தியேட்டர்களில் 100 முதல் 120 ரூபாயும், மால் தியேட்டர்களில் 150 முதல் 200 ரூபாய் வரையும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை உயர்த்த வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தியேட்டர்களில் விற்கப்படும் தின்பண்டங்கள் வெளி விலையை காட்டிலும் பல மடங்கு உயர்த்தி விற்கப்படுகிறது. குறிப்பாக மால் தியேட்டர்களில் பல மடங்கு விலைக்கு விற்கப்படுகிறது.
தற்போது தியேட்டரில் விற்கப்படும் நொறுக்கு தீனிகளுக்கு ஏற்கெனவே 18 சதவிகிதம் ஜிஎஸ்டி இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் ஒரே மாதிரியாக 5 சதகிவித ஜிஎஸ்டி விதிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50வது கூட்டம் வருகிற 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தியேட்டர்களில் விற்கப்படும் நொறுக்கு தீனிகளுக்கு 5 சதவீதம் வரி விதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் ஒரே மாதிரியாக 5 சதவீதம் வரி விதிக்க வேண்டுமென மத்திய, மாநில வரித்துறை அதிகாரிகள் அடங்கிய பிட்மென்ட் கமிட்டி, கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன் பேரில் ஜி.எஸ்.டி. கவுன்சில் இது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கவுள்ளது.