அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
நடிகை திரிஷா திரையுலகில் நுழைந்து இந்த 20 வருடங்களில் தற்போதும் முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார். அடுத்தடுத்து வெளியான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்கள் மூலமாகவும் திரிஷா இன்னும் அசைக்க முடியாத நடிகையாக மாறியுள்ளார். இன்னொரு பக்கம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்திலும் 'ஹே ஜூட்' என்கிற படத்தில் கதாநாயகியாக நுழைந்த திரிஷா, அதைத்தொடர்ந்து ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் உருவாகும் ராம் என்கிற படத்தில் நடிக்கிறார், மூன்று வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட இந்த படம் இன்னும் முடிவடையாத நிலையில் இருக்கிறது,
இதைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் மூன்றாவதாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான பாரன்சிக் என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.. இந்த படத்தை அகில் பால் மற்றும் அனாஸ்கான் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கியிருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அவர்கள் மீண்டும் டொவினோ தாமஸ் நடிப்பில் ஐடென்டி என்கிற படத்தை இயக்க உள்ளனர்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனராம். அனேகமாக இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இன்னொரு கதாநாயகியாக முக்கிய வேடத்தில் மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.