'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் | வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம் |
காமெடியனாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிரேம்ஜி அமரன். அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் படம் அனைத்திலும் அவர் நடித்துள்ளார். :மாங்கா' என்ற படத்தில் கதை நாயகனாக நடித்திருந்தார். தற்போது அவர் மீண்டும் கதை நாயகனாக நடித்துள்ள படம் 'சத்திய சோதனை'. இந்த படத்தை' ஒரு கிடாயின் கருணை மனு' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் சங்கையா இயக்கி உள்ளார். ஸ்வயம் சித்தா, ரேஷ்மா, கு.ஞானசம்பந்தம், 'சித்தன்' மோகன் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் வருகிற 14ம்தேதி வெளியாகிறது.
படம் பற்றி சுரேஷ் சங்கய்யா கூறியதாவது: இது அருப்புக்கோட்டை பின்னணியில் நடக்கும் கதை. சிறு நகரங்களில் காவல் நிலையம், நீதிமன்றம் எப்படி இயங்குகிறது என்பதை இந்தப் படம் சொல்லும். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை படங்களில் பார்த்த பிரேம்ஜி இதில் தெரியமாட்டார். அவர் ஸ்டைலும் இருக்காது. வித்தியாசமான பிரேம்ஜியை இதில் பார்க்கலாம். பார்வையாளர்கள் கதையோடு தங்களைத் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும். என்றார்.