கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம். ‛வீட்ல விசேஷம்' என்ற படத்தில் ஒரு நர்ஸ் கேரக்டரில் நடித்தவர், அதையடுத்து சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள ‛மாமன்னன்' படத்தில் வடிவேலுவின் மனைவியாக வீராயி என்ற கேரக்டரில் நடித்துள்ள கீதா கைலாசம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛மாமன்னன் படத்தில் வடிவேலுவுடன் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது பயமாக இருந்தது. அதையடுத்து ஸ்பாட்டுக்கு சென்ற போது அவருக்கு இணையாக நடிப்பது சவாலாகவும் இருந்தது. மேலும், இதற்கு முன்பு நான் நடித்த படங்களில் நான் நடித்த கேரக்டர்கள் பெரிதாக ரசிகர்களை போய் சேராத நிலையில், இந்த படத்தின் கேரக்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் ரவுடிகளுக்கு பயந்து கட்டிலுக்கு அடியில் நான் ஒளியும் காட்சியில் சிறப்பாக நடித்ததாக பலரும் குறிப்பிட்டு சொல்கிறார்கள். அந்த வகையில் இந்த மாமன்னன் படம் ரசிகர்கள் மத்தியில் எனக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது'' என்கிறார் கீதா கைலாசம்.