நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம். ‛வீட்ல விசேஷம்' என்ற படத்தில் ஒரு நர்ஸ் கேரக்டரில் நடித்தவர், அதையடுத்து சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள ‛மாமன்னன்' படத்தில் வடிவேலுவின் மனைவியாக வீராயி என்ற கேரக்டரில் நடித்துள்ள கீதா கைலாசம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛மாமன்னன் படத்தில் வடிவேலுவுடன் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது பயமாக இருந்தது. அதையடுத்து ஸ்பாட்டுக்கு சென்ற போது அவருக்கு இணையாக நடிப்பது சவாலாகவும் இருந்தது. மேலும், இதற்கு முன்பு நான் நடித்த படங்களில் நான் நடித்த கேரக்டர்கள் பெரிதாக ரசிகர்களை போய் சேராத நிலையில், இந்த படத்தின் கேரக்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் ரவுடிகளுக்கு பயந்து கட்டிலுக்கு அடியில் நான் ஒளியும் காட்சியில் சிறப்பாக நடித்ததாக பலரும் குறிப்பிட்டு சொல்கிறார்கள். அந்த வகையில் இந்த மாமன்னன் படம் ரசிகர்கள் மத்தியில் எனக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது'' என்கிறார் கீதா கைலாசம்.