நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் |
பிரபல சின்னத்திரை நடிகை ஆயிஷா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் யோகேஷ் என்பவரை காதலித்து வந்ததை வெளிப்படையாக அறிவித்தார். இதனைதொடர்ந்து இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலான நிலையில், ஆயிஷா - யோகேஷ் திருமணம் விரைவிலேயே நடைபெறும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வந்தனர். ஆனால், அதிர்ச்சியளிக்கும் வகையில் யோகேஷுடன் எடுத்துக்கொண்ட நிச்சயதார்த்த புகைப்படங்களையும், டேட்டிங் செய்யும் போது பதிவிட்ட புகைப்படங்களையும் ஆயிஷா தனது இன்ஸ்டாவிலிருந்து திடீரென நீக்கியுள்ளார். மேலும், சமீப காலங்களாக ஆயிஷா தனது போட்டோஷூட் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறார். சீரியல் நடிகைகளின் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை தொடர்ந்து பிரிவையும் துயரத்தையும் சந்தித்து வரும் நிலையில் ஆயிஷாவின் இந்த செயலால் யோகேஷுக்கும் ஆயிஷாவுக்கும் ப்ரேக்கப் ஆகிவிட்டதா? என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஆனால் இதுபற்றி ஆயிஷா எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.