இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

கடந்த 2015ம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த படம் ‛டிமான்டி காலனி'. ஹாரர் த்ரில்லர் ஜானரில் வெளிவந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குனர் இயக்குவதாக முதலில் அறிவிப்பு வெளியானது. ஆனால், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கோப்ரா திரைப்படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை அருள்நிதியை வைத்து அஜய் ஞானமுத்துவே இயக்குவதாக அறிவித்தனர். சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று படப்பிடிப்பு நிறைவு அடைந்ததாக படக்குழுவினர் போட்டோ உடன் அறிவித்துள்ளனர்.
நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் முத்துக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம்.சி.ஸ் இசையமைக்கிறார். தொடர்ந்து படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் என அறிவித்துள்ளனர். முதல்பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகி உள்ளது.