பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
கடந்த 2015ம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த படம் ‛டிமான்டி காலனி'. ஹாரர் த்ரில்லர் ஜானரில் வெளிவந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குனர் இயக்குவதாக முதலில் அறிவிப்பு வெளியானது. ஆனால், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கோப்ரா திரைப்படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை அருள்நிதியை வைத்து அஜய் ஞானமுத்துவே இயக்குவதாக அறிவித்தனர். சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று படப்பிடிப்பு நிறைவு அடைந்ததாக படக்குழுவினர் போட்டோ உடன் அறிவித்துள்ளனர்.
நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் முத்துக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம்.சி.ஸ் இசையமைக்கிறார். தொடர்ந்து படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் என அறிவித்துள்ளனர். முதல்பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகி உள்ளது.