அஜித், ஆதிக் காம்போ உறுதி | கவின் நடித்துள்ள 'கிஸ்' படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது! | 'லியோ' படத்தில் உயிரிழந்த மடோனாவின் கேரக்டர் 'பென்ஸ்' படத்தில் உயிர் பெறுகிறதா? | சூர்யா 46வது படத்தின் பாடல் பயங்கரமாக வந்திருக்கு! - ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்ட தகவல் | சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி! கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ | உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பில் பவன் கல்யாண் | தெலுங்கு இயக்குனர்களுடன் மூன்றாவது முறை கூட்டணியில் சூர்யா | 150 நாள் படப்பிடிப்பு நடந்த 'இரண்டு வானம்' | 'பரியேறும் பெருமாள்' முதல் சாய்ஸ் அதர்வா | பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன் செய்தாரா அதுல்யா |
கடந்த 2015ம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த படம் ‛டிமான்டி காலனி'. ஹாரர் த்ரில்லர் ஜானரில் வெளிவந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குனர் இயக்குவதாக முதலில் அறிவிப்பு வெளியானது. ஆனால், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கோப்ரா திரைப்படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை அருள்நிதியை வைத்து அஜய் ஞானமுத்துவே இயக்குவதாக அறிவித்தனர். சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று படப்பிடிப்பு நிறைவு அடைந்ததாக படக்குழுவினர் போட்டோ உடன் அறிவித்துள்ளனர்.
நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் முத்துக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம்.சி.ஸ் இசையமைக்கிறார். தொடர்ந்து படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் என அறிவித்துள்ளனர். முதல்பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகி உள்ளது.