நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
கடந்த 2015ம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த படம் ‛டிமான்டி காலனி'. ஹாரர் த்ரில்லர் ஜானரில் வெளிவந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குனர் இயக்குவதாக முதலில் அறிவிப்பு வெளியானது. ஆனால், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கோப்ரா திரைப்படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை அருள்நிதியை வைத்து அஜய் ஞானமுத்துவே இயக்குவதாக அறிவித்தனர். சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று படப்பிடிப்பு நிறைவு அடைந்ததாக படக்குழுவினர் போட்டோ உடன் அறிவித்துள்ளனர்.
நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் முத்துக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம்.சி.ஸ் இசையமைக்கிறார். தொடர்ந்து படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் என அறிவித்துள்ளனர். முதல்பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகி உள்ளது.