மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு முறை ஒழிக்கப்பட்டுவிட்டது. கேரளாவில் இன்னும் நடைமுறையில் உள்ளது. பண்டிகை காலங்களில் 10 கோடி பம்பர் பரிசு அறிவித்து லாட்டரி சீட்டை அரசு விற்கிறது. கேரள மாநில எல்லைகளில் வசிக்கும் தமிழர்கள் கேரள மாநில லாட்டரிகளை வாங்குகிறார்கள். அவர்களில் ஒரு சிலருக்கு பரிசு கிடைத்திருக்கிறது. அப்படி கிடைத்தவர்கள் தங்கள் பெயர் விபரங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த பின்னணியில் உருவாகி உள்ள படம்தான் பம்பர்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி உள்ள இந்த படத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த குடும்பத்திற்கு 10 கோடி பரிசு விழுகிறது. அது யார் என்பதை தேடி ஒரு கூட்டம் அலைகிறது. விஷயம் கசிந்து உறவுக்கூட்டம் முற்றுகிறது. கேரள அரசு பணம் தமிழனுக்கு செல்வதா என்ற பிரச்சினை உருவாகிறது. இறுதியில் நடப்பது என்ன, என்பதுதான் பம்பர் படத்தின் கதை. இதனை காமெடி கலந்து இரு மாநில உணர்வுகளின் பிரச்சினையாக உருவாக்கி உள்ளார் அறிமுக இயக்குனர் செல்வகுமார்.
இப்படத்தை வேதா பிக்சர்ஸ் பேனரில் சு.தியாகராஜா தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஒளிப்பதிவை வினோத் ரத்தினசாமி கையாண்டுள்ளார். வெற்றி, ஷிவானி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். ஹரிஷ் பெரடி முக்கியமான கேரக்டரில் அதாவது லாட்டரி வியாபாரியாக நடித்துள்ளார். வருகிற 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.