கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான படம் 'ஆதி புருஷ்'. இப்படத்திற்கான புரமோஷனை படக்குழு சரியாக நடத்தாத நிலையிலும் இப்படம் 450 கோடி வசூலித்துள்ளது. இந்த வசூல் பற்றிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது. திருப்பதியில் நடைபெற்ற ஒரே ஒரு நிகழ்ச்சியைத் தவிர இப்படத்திற்காக வேறு எங்குமே பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. ஏன், அதைத் தவிர்த்தார்கள் என்பதற்கும் பதிலில்லை.
இதனிடையே, இப்படம் 450 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டாலும் வசூல் ரீதியாக தோல்வியை நோக்கிப் போவதாகத்தான் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் மட்டும் இப்படத்தின் மொத்த வசூல் 100 கோடியைக் கடந்துள்ளது. தெலுங்கில் 80 கோடி, ஹிந்தியில் 70 கோடி, கர்நாடகாவில் 10 கோடி, தமிழகத்தில் 2 கோடி, வெளிநாடுகளில் 25 கோடி, கேரளாவில் 1 கோடி என நிகர வசூல் கிடைத்துள்ளதாம். 250 கோடி வரை வியாபாரம் நடந்துள்ள இப்படத்திற்கான நிகர வசூல் 188 கோடி. இன்னும் 62 கோடி வரை வசூலித்தால் மட்டுமே இப்படம் மொத்த வியாபாரத்தில் லாபத்தைக் கடக்கும் என்கிறார்கள். அடுத்து வரும் நாட்களில் இப்படம் ஓடினாலும் அந்தத் தொகை வசூலிக்க வாய்ப்பில்லையாம்.
படத்திற்காக எழுந்த சர்ச்சைகள்தான் இப்படத்தின் வசூலைப் பாதித்துள்ளது என்பது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களின் கருத்தாக உள்ளது. பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சாஹோ, ராதேஷ்யாம்' படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்த நிலையில் அந்த வரிசையில் இப்படமும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.