மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்றுள்ள வாணி போஜன் இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். அண்மையில் 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் புரொமோஷனுக்காக சென்றிருந்த அவர், பெண்களை தவறாக பார்ப்பவர்கள் குறித்து கோபமாக பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அவர் கூறுகையில், 'நான் பல சிக்னல்களில் பார்த்திருக்கிறேன். பெண்கள் பைக்கில் செல்லும் போது சேலை கட்டி சென்றால் அவர்கள் மேல் தான் அனைவரது கண்ணும் இருக்கும். அது ஏன் என்று தெரியவில்லை. சேலை கட்டினாலே இப்படி தான் பார்க்க வேண்டுமா?. வயதான பெண்களை கூட வேறு மாதிரியாகத்தான் பார்க்கிறார்கள். அந்த மாதிரியான ஆட்கள் ஒருபோதும் திருந்தமாட்டார்கள்' என கோபமாக கூறியிருந்தார்.