‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது |

விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அல்லு அர்ஜுனுடன் 'புஷ்பா 2' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, தன்னுடைய ஆரம்ப காலத்திலிருந்து இருந்த மேனேஜரை அவர் நீக்கிவிட்டதாக ஒரு செய்தி வந்து தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்மிகாவிடம் அவர் 80 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால், இது குறித்து ராஷ்மிகா இதுவரை எந்த ஒரு புகாரையும் தெரிவிக்கவில்லை. அவரே இந்தப் பிரச்னையை பேசித் தீர்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. தன்னுடன் நீண்ட காலமாக இருந்தவர் என்பதால் ராஷ்மிகா இதைப் பெரிதாக்க விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள்.
ராஷ்மிகா தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் 'ரெயின்போ' படத்திலும் நடித்து வருகிறார்.