இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
பிரபல திரைப்பட நடிகையான வினோதினி சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக அரசியல் சார்ந்த கருத்துகளை பேசி வருகிறார். இந்நிலையில், அவர் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளார். இணைந்த பின் அவர் வெளியிட்ட முதல் பதிவிலேயே சில அரசியல் கட்சிகளை நாசூக்காக கலாய்த்துள்ளார்.
கடவுளுக்கும் அஞ்ஞானவதிக்கும் இடையே நடக்கும் உரையாடலாக அந்த பதிவை வெளியிட்டுள்ள வினோதினி, மதத்தின் அடிப்படையில் ஏன் கட்சியில் சேரவில்லை என்று கடவுள் கேட்க, அதற்கு வாரம் ஒருமுறை கள்ள ஆடியோ, வீடியோ ரெக்கார்டிங் செய்யும் கருவிகள் இருப்பதை கண்டுபிடிக்க காசு இல்லை என்று பதில் கூறியுள்ளார். அதேபோல் பகுத்தறிவு பேசுற கட்சியில் சேரலையா? என்று கடவுள் கேட்க. 'பகுத்தறிவா? அப்படினா என்னன்னு கேட்குறாங்க' என்று அந்த கட்சிக்காரர்களுக்கே பகுத்தறிவு இல்லை என கிண்டலடித்துள்ளார். இப்படியாக நீண்டுகொண்டே செல்லும் அந்த உரையாடலில் கடைசியில் மைய அரசியல் என்று குறிப்பிட்டு தான் மக்கள் நீதி மையம் கட்சியில் சேர்ந்திருப்பதை தெரிவித்துள்ளார். வினோதினியின் இந்த நக்கலான பதிவை படிக்கும் பலரும் ஆரம்பமே அமர்க்களமா? என ஜாலியாக கேட்டு வருகின்றனர்.