கார்த்தி படத்தில் இணைந்த கல்யாணி | கடந்த 40 ஆண்டுகளாக பணத்தை மதிக்காமல் இருந்தேன் : நடிகர் சசிகுமார் | ''விஜய்சேதுபதி மகன் விஜய் மாதிரி வருவார்'': வனிதா விஜயகுமார் | ஒரே நாளில் மீட்கப்பட்ட உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு | 50 லட்சம் உதவி செய்வதாக பிரபாஸ் சொல்லவில்லை : காமெடி நடிகரின் குடும்பம் மறுப்பு | 77 லட்சம் மோசடி செய்ததாக நடிகை ஆலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளர் கைது | 24 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலீில் ரீ ரீலீஸாகும் மோகன்லாலின் ராவண பிரபு | காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது! | தனியார் பேருந்துகள் ஓடாத கேரளா வெளிநாடு போல இருக்கிறது : 2018 இயக்குனர் சர்ச்சை கருத்து | 7 வருடங்களாக புறக்கணிக்கப்பட்ட பட வாய்ப்பு : விஷ்ணு விஷால் ஓபன் டாக் |
ஒம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் 'ஆதிபுருஷ்'. இப்படம் நாளை(ஜூன் 16) உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகிறது.
'பாகுபலி' படத்திற்குப் பிறகுதான் இந்திய அளவிலான வசூல் 1000 கோடி என்ற சாதனையைப் படைக்க ஆரம்பித்தது. அதற்குப் பிறகு 'கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர், பதான்'' ஆகிய படங்களும் அந்த சாதனையைப் படைத்தன. அடுத்து அப்படிப்பட்ட சாதனையை 'ஆதிபுருஷ்' படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கான முன்பதிவு வட இந்திய மாநிலங்களிலும், தெலுங்கு மாநிலங்களிலும் சிறப்பாக இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிவிஆர் தியேட்டர்களில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவு நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். முதல் நாள் வசூலாக மட்டும் சுமார் 80 கோடிக்கும் அதிகமாகவும், முதல் வார இறுதியில் 200 கோடி வரையிலும் இப்படம் வசூலிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால், இப்படத்திற்கு தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளில் எந்தவிதமான பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தாமல் விட்டுள்ளார்கள். இது பிரபாஸ் ரசிகர்களிடத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு பிரம்மாண்ட படத்தை எடுத்துவிட்டு திருப்பதியில் மட்டும் விழாவை நடத்திவிட்டு மற்ற மாநிலங்களில் எதையும் செய்யாததும் வினியோகஸ்தர்களிடையே ஏமாற்றத்தைத் தந்துள்ளது.