போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
ஒம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் 'ஆதிபுருஷ்'. இப்படம் நாளை(ஜூன் 16) உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகிறது.
'பாகுபலி' படத்திற்குப் பிறகுதான் இந்திய அளவிலான வசூல் 1000 கோடி என்ற சாதனையைப் படைக்க ஆரம்பித்தது. அதற்குப் பிறகு 'கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர், பதான்'' ஆகிய படங்களும் அந்த சாதனையைப் படைத்தன. அடுத்து அப்படிப்பட்ட சாதனையை 'ஆதிபுருஷ்' படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கான முன்பதிவு வட இந்திய மாநிலங்களிலும், தெலுங்கு மாநிலங்களிலும் சிறப்பாக இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிவிஆர் தியேட்டர்களில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவு நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். முதல் நாள் வசூலாக மட்டும் சுமார் 80 கோடிக்கும் அதிகமாகவும், முதல் வார இறுதியில் 200 கோடி வரையிலும் இப்படம் வசூலிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால், இப்படத்திற்கு தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளில் எந்தவிதமான பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தாமல் விட்டுள்ளார்கள். இது பிரபாஸ் ரசிகர்களிடத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு பிரம்மாண்ட படத்தை எடுத்துவிட்டு திருப்பதியில் மட்டும் விழாவை நடத்திவிட்டு மற்ற மாநிலங்களில் எதையும் செய்யாததும் வினியோகஸ்தர்களிடையே ஏமாற்றத்தைத் தந்துள்ளது.