சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

ஒம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் 'ஆதிபுருஷ்'. இப்படம் நாளை(ஜூன் 16) உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகிறது.
'பாகுபலி' படத்திற்குப் பிறகுதான் இந்திய அளவிலான வசூல் 1000 கோடி என்ற சாதனையைப் படைக்க ஆரம்பித்தது. அதற்குப் பிறகு 'கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர், பதான்'' ஆகிய படங்களும் அந்த சாதனையைப் படைத்தன. அடுத்து அப்படிப்பட்ட சாதனையை 'ஆதிபுருஷ்' படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கான முன்பதிவு வட இந்திய மாநிலங்களிலும், தெலுங்கு மாநிலங்களிலும் சிறப்பாக இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிவிஆர் தியேட்டர்களில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவு நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். முதல் நாள் வசூலாக மட்டும் சுமார் 80 கோடிக்கும் அதிகமாகவும், முதல் வார இறுதியில் 200 கோடி வரையிலும் இப்படம் வசூலிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால், இப்படத்திற்கு தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளில் எந்தவிதமான பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தாமல் விட்டுள்ளார்கள். இது பிரபாஸ் ரசிகர்களிடத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு பிரம்மாண்ட படத்தை எடுத்துவிட்டு திருப்பதியில் மட்டும் விழாவை நடத்திவிட்டு மற்ற மாநிலங்களில் எதையும் செய்யாததும் வினியோகஸ்தர்களிடையே ஏமாற்றத்தைத் தந்துள்ளது.