பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
ஏசியன் சினிமாஸ் என்ற நிறுவனம் தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்களைக் கட்டி திறந்து வருகிறது. அந்த விதத்தில் மகேஷ்பாபு, விஜய் தேவரகொண்டா, அல்லு அர்ஜுன் ஆகியோரது பெயரில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
அடுத்து ஏசியன் சினிமாஸ் நிறுவனம் சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மல்டிபிளக்ஸ் தியேட்டரை கட்டப் போகிறது. நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற அல்லு அர்ஜுனின் எஎஎ மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறப்பு விழாவின் போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து ஏசியன் சினிமாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுனில் நரங் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் தற்போது சென்னையில் எந்த ஒரு நடிகருக்கும் சொந்தமாக தியேட்டர்கள் கிடையாது. நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உள்ள சிவகார்த்திகேயன் முதல் முறையாக தியேட்டர் தொழிலில் இறங்க உள்ளார்.