'ஆபரேஷன் சிந்தூர்' : டிரேட் மார்க் பதிவுக்கான விண்ணப்ப சர்ச்சை | 'ரெட்ரோ' ருக்கு - வாழ்த்தியவர்களுக்கு பூஜா ஹெக்டே நன்றி | லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல் |
இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், குஞ்சாகா போபன், வினீத் சீனிவாசன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் 2018. கேரளாவில் 2018ல் ஏற்பட்ட பெரும் மழை வெள்ளம் பாதிப்பை மையப்படுத்தி இப்படம் வெளிவந்தது. படம் வெளியான முதலே பாராட்டுகளையும், வசூலையும் குவித்து வந்த இந்தப்படம் ஏற்கனவே உலகளவில் அதிகம் வசூலித்த மலையாள படமான புலி முருகன் படத்தின் சாதனையை முறியடித்தது. இப்போது மற்றொரு புதிய சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. இந்த படம் வெளியாகி 30 நாட்கள் கடந்த நிலையில் தற்போது உலகளவில் ரூ. 200 கோடி வசூலை எட்டியுள்ளது. இதுவே மலையாள சினிமாவின் முதல் ரூ. 200 கோடி வசூலித்த படம் என்று ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.