அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

வளர்ந்து வரும் தெலுங்கு நடிகை டிம்பிள் ஹயாதி. 'கல்ப்' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் தேவி 2 படத்தில் நடித்த அவர் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால் ஜோடியாக நடித்திருந்தார். ஐதராபத்தில் வசித்து வரும் டிம்பிள் ஹயாதி அதே பகுதியில் குடியிருக்கும் போலீஸ் அதிகாரி ராகுல் ஹெக்டேவுக்கும் முட்டல், மோதல் இருந்து வந்துள்ளது.
போலீஸ் அதிகாரியின் காரை டிம்பிள் ஹயாதி தனது காலால் எட்டி உதைத்ததுடன், தனது காரால் மோதி சேதப்படுத்தியதாகவும் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரியின் கார் டிரைவர் புகார் அளித்தார். இதையடுத்து டிம்பிள் ஹயாதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்த நிலையில் வழக்கை எதிர்த்து டிம்பிள் ஹயாதி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். போலீஸ் அதிகாரியின் நெருக்கடியால்தான் ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் என் மீது தவறான வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார். டிம்பிள் ஹயாதியின் கோரிக்கையை ஏற்க கோர்ட் மறுத்ததுடன் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.