ஊழலுக்கு எதிராக நிஜ வாழ்க்கையிலும் நிற்க முன்வர வேண்டும் : விஷால் | விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை : மருத்துவமனை அறிக்கை | வருத்தம் தெரிவிக்கிறேன் : பேட்டியில் ஆரம்பித்து அறிக்கையில் முடித்து வைத்த ஞானவேல்ராஜா | த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை : மன்சூர் அலிகான் அடித்த அந்தர் பல்டி | நானி படத்திற்காக ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து பாடிய துருவ் விக்ரம் | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து முழு கணக்கு விவரம்… | 'சலார்' கதை பற்றி சொன்ன இயக்குனர் பிரசாந்த் நீல் | 'குய்கோ'விற்கு உயிரோடு அஞ்சலி வைத்துவிட்டார்கள் - இயக்குனர் வருத்தம் | ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் |
தமிழில் 'தேவி 2, வீரமே வாகை சூடும்' படங்களில் நடித்தவர் டிம்பிள் ஹயாதி. ஐதராபாத்தில் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் அவரது ஆண் நண்பர் விக்டர் டேவிட் உடன் லிவிங் டு கெதர் ஆக வசித்து வருகிறாராம். அவர்களது அபார்ட்மென்ட்டில் வசிக்கும் ஐபிஎஸ் அதிகாரியான ராகுல் ஹெக்டே என்பவருடன் கார் பார்க்கிங் விஷயமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத் காவல் துறையில் டிராபிக் பிரிவில் உதவி கமிஷனராக பணி புரிபவர் ராகுல் ஹெக்டே. அவரது அலுவலக வாகனத்தை அவருக்குரிய பார்க்கிங் பகுதியில் நிறுத்தியுள்ளார். பார்க்கிங் ஏரியாவிற்கு வரும் போதெல்லாம் போலீஸ் வாகனத்தை டிம்பிள் எட்டி உதைத்துவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளாராம். பத்து நாட்களுக்கு முன்பு தன்னுடைய காரை டிம்பிள் எடுக்கும் போது போலீஸ் வாகனத்திற்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும், போலீஸ் வாகன டிரைவருடன் டிம்பிள் அடிக்கடி சண்டைக்குச் செல்வாராம். அதனால் டிரைவர் சேத்தன் குமார் ஜுபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் டிம்பிள் மீது புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு வாகனத்தை வேண்டுமென்றே இடித்ததற்காகவும், தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் டிம்பிள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையில் டிம்பிள் அவரது வாக்குமூலத்தைக் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே, “அதிகாரத்தைப் பயன்படுத்துவது எந்தத் தவறையும் நிறுத்தாது,” என பதிவிட்டுள்ளார் டிம்பிள்.