அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
பாலிவுட் நடிகரான ஷாருக்கானுக்கு இந்திய அளவில் மட்டுமல்லாமல் இந்தியாவையும் தாண்டி பக்கத்து நாடான பாகிஸ்தானிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமல்ல அவருடன் நடிப்பதற்காக அந்த நாட்டு நடிகர், நடிகைகளும் ஆர்வமாக இருக்கின்றனர். அந்தவகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடன இயக்குனர் பரா கான், ஷாருக்கானை வைத்து இயக்கிய ஓம் சாந்தி ஓம் என்கிற படத்தில் ஷாருக்கானின் தந்தையாக நடித்தவர் பாகிஸ்தான் நடிகர் ஜாவேத் ஷேக்.
இந்த படத்தில் நடிப்பதற்காக அவரிடம் சம்பளம் பேசப்பட்டபோது தனக்கு வெறும் ஒரு ரூபாய் மட்டும் சம்பளமாக கொடுத்தால் போதும் என்றும் ஷாருக்கானுடன் இணைந்து நடிப்பதே தனக்கு மிகப்பெரிய பெருமை என்றும் கூறினாராம்.
இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்ட ஜாவேத் ஷேக், ‛‛தான் அப்படி கூறினாலும் அவர்களாகவே ஒரு தொகையை எனது சம்பளமாக நிர்ணயித்து, அதில் எனக்கு முதல் கட்டமாக ஒரு காசோலை கொடுத்தார்கள். அந்தத்தொகையைப் பார்த்தே நான் பிரமித்துப் போனேன்” என்று கூறியுள்ளார்.