'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி. கடந்த 2021ஆம் ஆண்டு தனது வாழ்க்கைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படம் ஒன்றை உருவாக்க இருப்பதாக கங்குலி அறிவித்திருந்தார். அப்போது கங்குலியாக நடிக்க அவர் ரன்பீர் கபூரை பரிசீலனை செய்தார். ஆனால், அதற்கான பணிகள் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. மீண்டும் கங்குலியின் பயோபிக் படத்தை தூசி தட்டி பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிப்பதாகவும், ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் கங்குலியாக நடிக்க விக்கி டோனர், ஆர்டிகள் 15, பதாய் ஹோ போன்ற படங்களில் நடித்த ஆயுஷ்மான் குராணா உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் கங்குலியின் பள்ளி கால கட்டத்தில் துவங்கி கிரிக்கெட்டில் அவர் சாதித்தது, பின்னர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் வைத்து உருவாகிறது என்கிறார்கள்.