கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் |

நடிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அந்த நாடு அழைப்பு விடுத்துள்ளது. தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை தூதர் வெங்கடேஷ்வரன், சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை நேற்று சந்தித்து பேசினார். அப்போது ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு வெங்கடேஷ்வரன் அழைப்பு விடுத்தார். ராமாயண இதிகாசத்தில் தொடர்புடைய புனித தலங்களையும், இதர பாரம்பரிய கலாசார மற்றும் மத சின்னங்களை பார்வையிடவும் இலங்கைக்கு வருமாறு வெங்கடேஷ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.
ரஜினியின் வருகை இந்தியா, இலங்கை இரு நாடுகளின் சுற்றுலா வளர்ச்சி, திரைப்பட வளர்ச்சி ஆகியவற்றுக்கு அது உதவும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். தற்போது கையில் உள்ள படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு கண்டிப்பாக இலங்கை வருவதாக ரஜினி உறுதி அளித்துள்ளார். ரஜினியை இலங்கை தூதர் சந்தித்திருப்பது இதுவே முதல் முறை, ஏற்கெனவே சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் நாடுகள் ரஜினியை தங்கள் நாட்டுக்கு விருந்தினராக அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.




