விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? |

நடிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அந்த நாடு அழைப்பு விடுத்துள்ளது. தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை தூதர் வெங்கடேஷ்வரன், சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை நேற்று சந்தித்து பேசினார். அப்போது ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு வெங்கடேஷ்வரன் அழைப்பு விடுத்தார். ராமாயண இதிகாசத்தில் தொடர்புடைய புனித தலங்களையும், இதர பாரம்பரிய கலாசார மற்றும் மத சின்னங்களை பார்வையிடவும் இலங்கைக்கு வருமாறு வெங்கடேஷ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.
ரஜினியின் வருகை இந்தியா, இலங்கை இரு நாடுகளின் சுற்றுலா வளர்ச்சி, திரைப்பட வளர்ச்சி ஆகியவற்றுக்கு அது உதவும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். தற்போது கையில் உள்ள படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு கண்டிப்பாக இலங்கை வருவதாக ரஜினி உறுதி அளித்துள்ளார். ரஜினியை இலங்கை தூதர் சந்தித்திருப்பது இதுவே முதல் முறை, ஏற்கெனவே சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் நாடுகள் ரஜினியை தங்கள் நாட்டுக்கு விருந்தினராக அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.




