மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
வாகை சூடவா, மெளன குரு படங்களின் மூலம் பிரபலமானவர் இனியா. தமிழ், மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக இரண்டாவது நாயகி, சிறப்பு தோற்றங்களில் நடித்து வருகிறார். கடைசியாக 'ரைட்டர்' படத்தில் சமுத்திரகனி மனைவியாக நடித்திருந்தார். 'ஆதார்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் கதையின் நாயகியாக நடிக்கும் படம் 'சீரன்'. இதில் இனியாவுடன் அருந்ததி, சோனியா அகர்வால், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜேம்ஸ் கார்த்திக் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். துரை.கே.முருகன் இயக்குகிறார்.
படத்தை தயாரித்து, நாயகனாகவும் நடிக்கும் ஜேம்ஸ் கார்த்திக் கூறியதாவது : செய்யாறு பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படம் தயாராகி உள்ளது. என் பெற்றோர் கலப்பு திருமணம் செய்ததால் எதிர்ப்புகளை சந்தித்தனர். ஊர்மக்களின் புறக்கணிப்புக்கும் ஆளானார்கள். என் தாயார் கஷ்டப்பட்டு என்னை வளர்த்துப் படிக்க வைத்தார். இப்போது நான் நல்ல நிலையில் இருக்கிறேன். சிங்கப்பூரில் தொழில் செய்கிறேன். என் பெற்றோர் மற்றும் எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது. ஊர் மக்கள் வெறுப்பை மறந்து எங்களை ஏற்றுக்கொண்டார்களா? என்பது கதை. என்றார்.