மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
வாகை சூடவா, மெளன குரு படங்களின் மூலம் பிரபலமானவர் இனியா. தமிழ், மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக இரண்டாவது நாயகி, சிறப்பு தோற்றங்களில் நடித்து வருகிறார். கடைசியாக 'ரைட்டர்' படத்தில் சமுத்திரகனி மனைவியாக நடித்திருந்தார். 'ஆதார்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் கதையின் நாயகியாக நடிக்கும் படம் 'சீரன்'. இதில் இனியாவுடன் அருந்ததி, சோனியா அகர்வால், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜேம்ஸ் கார்த்திக் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். துரை.கே.முருகன் இயக்குகிறார்.
படத்தை தயாரித்து, நாயகனாகவும் நடிக்கும் ஜேம்ஸ் கார்த்திக் கூறியதாவது : செய்யாறு பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படம் தயாராகி உள்ளது. என் பெற்றோர் கலப்பு திருமணம் செய்ததால் எதிர்ப்புகளை சந்தித்தனர். ஊர்மக்களின் புறக்கணிப்புக்கும் ஆளானார்கள். என் தாயார் கஷ்டப்பட்டு என்னை வளர்த்துப் படிக்க வைத்தார். இப்போது நான் நல்ல நிலையில் இருக்கிறேன். சிங்கப்பூரில் தொழில் செய்கிறேன். என் பெற்றோர் மற்றும் எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது. ஊர் மக்கள் வெறுப்பை மறந்து எங்களை ஏற்றுக்கொண்டார்களா? என்பது கதை. என்றார்.