கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா ராய் | கார்த்தி 30 துவங்கியது | மராத்தி படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'ராஜா சிவாஜி' | இந்த முறையாவது சொன்ன தேதியில் ஜனநாயகன் வருமா? | கேரள கவர்னரிடமிருந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற மம்முட்டி | 25 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஆனந்தம்' | பிளாஷ்பேக்: செவிக்கு விருந்தளித்து, விழிக்கு விருந்தளிக்காமல் போன கே பாக்யராஜின் “காவடிச் சிந்து” | வெளியான உடன் ஹிட்டான 'பெத்தி' படத்தின் அதிரடி கிளாமர் பாடல் | முதல் வார இறுதியில் 140 கோடி வசூலித்த 'திரிஷ்யம் 3' | டிக்கெட் விலை அதிகரிக்கணும் : விஜய்சேதுபதிக்கு கண்டனம் |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் 28ம் தேதி, ஐந்து மொழிகளில் தியேட்டர்களில் வெளியான படம் 'பொன்னியின் செல்வன் 2'.
இப்படம் பணம் செலுத்திப் பார்க்கும் முறையில் நேற்று ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. எச்டி தரத்தில் படத்தைப் பார்க்க ரூ.399 கட்டணம். படம் வெளியாகி ஒரு மாதத்திற்குள்ளாக ஓடிடி தளத்தில் படம் கட்டண முறையில் மட்டுமே பார்க்க வழி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் அந்தக் கட்டணம் நீக்கப்பட்டு, பின் சந்தாதாரர்கள் மட்டும் கட்டணமில்லாமல் பார்க்க முடியும்.
'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் வெளியான போதும் இதே முறையில்தான் வெளியானது. முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகத்தை நிறைய பேர் தியேட்டர்களில் சென்று பார்க்கவில்லை. அதனால் இரண்டாம் பாகத்தின் வசூல் 300 கோடிக்கும் சற்றே கூடுதலாக மட்டுமே வசூலித்துள்ளது. முதல் பாக வசூல் 500 கோடியைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது. எனவே, இரண்டாம் பாகத்தை ஓடிடி தளத்தில் பலரும் பார்க்க வாய்ப்புள்ளது.




