மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

நடிகர் சசிகுமார் நடித்து கடைசியாக வெளிவந்த அயோத்தி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியையும், வரவேற்பையும் பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்து நல்ல கதைகளில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் சசிகுமார். இந்த நிலையில் அவரின் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் தயாரிப்பாளர் எஸ் தாணு, இயக்குனர் கஸ்தூரி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த படத்தை பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை தயாரித்த 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார்.
சசிகுமார் உடன் இணைந்து மற்றொரு கதாநாயகனாக நடிகர் நவீன் சந்திரா நடிக்கிறார். இதற்கு முன்பு இவர் பட்டாஸ் படத்தில் தனுஷிற்கு வில்லனாக நடித்திருந்தார். ஏற்கனவே பல தெலுங்கு படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை காவல் துறை உங்கள் நண்பன் படத்தை இயக்கிய ரஞ்சித் மணிகண்டன் இயக்குகிறார். இன்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.




