கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் |
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரின் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார் என்று அறிவித்தனர். சினிமா அல்லாமல் விரைவில் அரசியலில் இறங்குகிறார் விஜய். கடந்த சில மாதங்களாக தன் ரசிகர்களின் மூலமாக அம்பேத்கர் போன்ற முக்கிய தலைவர்களுக்கு அவர்கள் பிறந்தநாள் அன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்படி அறிவுறித்தினார்.
இந்நிலையில் அடுத்தப்படியாக மாணவர்களை சந்திக்க உள்ளார். சமீபத்தில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளை நேரில் சந்திக்கிறார் விஜய் தகவல் வெளியானது. இப்போது வருகின்ற ஜூன் 2ம் வாரத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதி தொகுதியிலும் 10ம், +2 வகுப்புகள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1500 மாணவ, மாணவிகளை விஜய் சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கூடுதலாக, பெற்றோர்கள் இல்லாத நிலையிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளையும் விஜய் சந்திக்கிறார் என கூறப்படுகிறது. ஜூன் 14ல் இதற்கான நிகழ்வு நடக்கலாம் என கூறப்படுகிறது.