கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

கேன்ஸ் திரைப்பட விழா மும்முரமாக நடந்து வருகிறது. அதில் இந்திய நடிகைகள் விதவிதமான ஆடைகள், அணிகலன்கள் அணிந்து கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா பிங்க் கலர் கவுண் அணிந்து காட்சி அளித்ததுடன் அவர் அணிந்திருந்த முதலை வடிவ நெக்லஸ் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் நகை நிபுணரான அருந்ததி ஷேத் என்பவர் ஊர்வசி ரவுத்தேலா அணிந்திருந்த நெக்லஸ் போலி என தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் “இந்த லுக்கை பார்த்து நான் குழம்பியிருக்கிறேன். அவர் கார்டியரின் ஒரிஜினல் மரியா பெலிக்ஸ் முதலை நெக்லஸா அணிந்திருக்கிறார்? பிரான்ஸில் இருக்கும் கேன்ஸுக்கு சென்றிருக்கிறீர்கள். அதுதான் கார்டியரின் சொந்த நாடு. வரலாற்று சிறப்புமிக்க நகையின் போலியை அணிவது. வெட்கமாக இருக்கிறது. நம் நாட்டில் ஸ்பெஷலான பொக்கிஷங்கள், நகைகள் இருக்கிறது. அதை அவர் அணிந்திருக்கலாம். என்றார்.
இதுகுறித்து ஊர்வசி ரவுத்தேலா தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஊர்வசி ரவுத்தேலா அணிந்திருந்த ஒரிஜினல் முதலை நெக்லஸின் விலை 200 கோடியில் இருந்து 276 கோடியாக உயர்ந்துவிட்டது. அவர் நிஜமான நகையே அணிந்திருந்தார். என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.