ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஊர்வசி ரத்தேலா. தமிழில் 'த லெஜன்ட்' படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வந்த 'டாகு மகாராஜ்' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
ஊர்வசி நேற்று அவருடைய 32வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அதற்காக வைரத்தால் ஆன ஆடையை அணிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீளமான கவுன் ஒன்றில் வைரங்களும், கண்ணாடிகளும் பதிக்கப்பட்டதாக அந்த ஆடை உள்ளது.
“நீங்கள் அனைவரும் என்னுடன் இருந்து பரிசுகள், வாழ்த்துகளைத் தந்ததற்கும், அன்பைப் பொழிந்ததற்கும் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது, என் மனதில் இருந்து நன்றி,” என நன்றி தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் எப்படிப்பட்ட பேஷனான ஆடைகள் அணிவது என்பது நடிகைகளுக்குள் இருக்கும் முக்கியமான ஒரு போட்டி. ஊர்வசியின் இந்த வைர ஆடை, பேஷன் ஆர்வலர்கள் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.