குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? |
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி. வி. பிரகாஷ் குமார் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் படத்திற்கு இசையமைத்து வருகிறார். நடிகராக தற்போது அடியே , டியர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். கோவையில் அவர் நடத்தும் ஆயிரத்தில் ஒருவன் இசை நிகழ்ச்சிக்காக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை பற்றி பகிர்ந்துள்ளார். அதன்படி, "ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். அது மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம். அந்த படம் நடந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன். செல்வராகவனின் அடுத்த பாகத்தின் கதையை கேட்க நான் மிக ஆர்வமாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த ‛ஆயிரத்தில் ஒருவன்' படம் 2010ல் வெளியானது. அப்போது பெரியளவில் வரவேற்பை பெறாத இந்த படத்தை இப்போது பலரும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக அந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் கொடுத்த இசை பெரியளவில் பேசப்பட்டது. ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாக உள்ளதாகவும், அதில் தனுஷ் நடிப்பதாகவும் ஏற்கனவே அறிவிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.