6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி |
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி. வி. பிரகாஷ் குமார் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் படத்திற்கு இசையமைத்து வருகிறார். நடிகராக தற்போது அடியே , டியர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். கோவையில் அவர் நடத்தும் ஆயிரத்தில் ஒருவன் இசை நிகழ்ச்சிக்காக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை பற்றி பகிர்ந்துள்ளார். அதன்படி, "ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். அது மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம். அந்த படம் நடந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன். செல்வராகவனின் அடுத்த பாகத்தின் கதையை கேட்க நான் மிக ஆர்வமாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த ‛ஆயிரத்தில் ஒருவன்' படம் 2010ல் வெளியானது. அப்போது பெரியளவில் வரவேற்பை பெறாத இந்த படத்தை இப்போது பலரும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக அந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் கொடுத்த இசை பெரியளவில் பேசப்பட்டது. ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாக உள்ளதாகவும், அதில் தனுஷ் நடிப்பதாகவும் ஏற்கனவே அறிவிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.