சிம்பு படத்தில் மிருணாள் தாக்கூர் சந்தானம் | திலீப் படத்தை இயக்குகிறேனா? 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனர் மறுப்பு | 'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதியில் தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? |

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி. வி. பிரகாஷ் குமார் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் படத்திற்கு இசையமைத்து வருகிறார். நடிகராக தற்போது அடியே , டியர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். கோவையில் அவர் நடத்தும் ஆயிரத்தில் ஒருவன் இசை நிகழ்ச்சிக்காக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை பற்றி பகிர்ந்துள்ளார். அதன்படி, "ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். அது மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம். அந்த படம் நடந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன். செல்வராகவனின் அடுத்த பாகத்தின் கதையை கேட்க நான் மிக ஆர்வமாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த ‛ஆயிரத்தில் ஒருவன்' படம் 2010ல் வெளியானது. அப்போது பெரியளவில் வரவேற்பை பெறாத இந்த படத்தை இப்போது பலரும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக அந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் கொடுத்த இசை பெரியளவில் பேசப்பட்டது. ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாக உள்ளதாகவும், அதில் தனுஷ் நடிப்பதாகவும் ஏற்கனவே அறிவிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.




