‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ் சினிமாவில் வெளிநாட்டு நடிகைகள் அறிமுகமாவது புதிதில்லை. எமி ஜாக்சன், சன்னி லியோன் உள்ளிட்ட ஏராளமான நடிகைகள் நடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் மதுரா. விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் லண்டனில் இருந்து வரும் இசை குழுவின் தலைவி ஜெசி என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.
தனது சினிமா அறிமுகம் குறித்து அவர் கூறியதாவது: எனது தந்தை ஜெர்மானியர், எனது தாய் இலங்கை தமிழ் பெண். இருவரும் காதலித்து திருமணம் செய்து என்னை பெற்றெடுத்தார்கள். ஜெர்மனியில் சட்டம் படித்திருக்கிறேன். விருப்ப மொழியாக தமிழ் படித்து பிராங்பர்ட் தமிழ் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். நாட்டியம், கர்நாடக சங்கீதம், மிருதங்கம் கற்றுள்ளேன். சுவிட்சர்லாந்து, லண்டன் நிறுவனங்களுக்கு மாடலிங் செய்து வருகிறேன். பல இசை வீடியோக்களில் நடித்திருக்கிறேன். இந்த வீடியோக்கள்தான் எனக்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட வாய்ப்பை பெற்றுத் தந்தது. இலங்கை அகதிகள் கதை என்பதாலும், என் அம்மா ஒரு இலங்கை அகதி என்பதாலும் இந்த படத்தில் நடித்தேன். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என்றார்.