பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
தமிழ் சினிமாவில் வெளிநாட்டு நடிகைகள் அறிமுகமாவது புதிதில்லை. எமி ஜாக்சன், சன்னி லியோன் உள்ளிட்ட ஏராளமான நடிகைகள் நடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் மதுரா. விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் லண்டனில் இருந்து வரும் இசை குழுவின் தலைவி ஜெசி என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.
தனது சினிமா அறிமுகம் குறித்து அவர் கூறியதாவது: எனது தந்தை ஜெர்மானியர், எனது தாய் இலங்கை தமிழ் பெண். இருவரும் காதலித்து திருமணம் செய்து என்னை பெற்றெடுத்தார்கள். ஜெர்மனியில் சட்டம் படித்திருக்கிறேன். விருப்ப மொழியாக தமிழ் படித்து பிராங்பர்ட் தமிழ் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். நாட்டியம், கர்நாடக சங்கீதம், மிருதங்கம் கற்றுள்ளேன். சுவிட்சர்லாந்து, லண்டன் நிறுவனங்களுக்கு மாடலிங் செய்து வருகிறேன். பல இசை வீடியோக்களில் நடித்திருக்கிறேன். இந்த வீடியோக்கள்தான் எனக்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட வாய்ப்பை பெற்றுத் தந்தது. இலங்கை அகதிகள் கதை என்பதாலும், என் அம்மா ஒரு இலங்கை அகதி என்பதாலும் இந்த படத்தில் நடித்தேன். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என்றார்.