டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் சினிமாவில் வெளிநாட்டு நடிகைகள் அறிமுகமாவது புதிதில்லை. எமி ஜாக்சன், சன்னி லியோன் உள்ளிட்ட ஏராளமான நடிகைகள் நடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் மதுரா. விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் லண்டனில் இருந்து வரும் இசை குழுவின் தலைவி ஜெசி என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.
தனது சினிமா அறிமுகம் குறித்து அவர் கூறியதாவது: எனது தந்தை ஜெர்மானியர், எனது தாய் இலங்கை தமிழ் பெண். இருவரும் காதலித்து திருமணம் செய்து என்னை பெற்றெடுத்தார்கள். ஜெர்மனியில் சட்டம் படித்திருக்கிறேன். விருப்ப மொழியாக தமிழ் படித்து பிராங்பர்ட் தமிழ் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். நாட்டியம், கர்நாடக சங்கீதம், மிருதங்கம் கற்றுள்ளேன். சுவிட்சர்லாந்து, லண்டன் நிறுவனங்களுக்கு மாடலிங் செய்து வருகிறேன். பல இசை வீடியோக்களில் நடித்திருக்கிறேன். இந்த வீடியோக்கள்தான் எனக்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட வாய்ப்பை பெற்றுத் தந்தது. இலங்கை அகதிகள் கதை என்பதாலும், என் அம்மா ஒரு இலங்கை அகதி என்பதாலும் இந்த படத்தில் நடித்தேன். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என்றார்.




