50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு |
மரகத நாணயம் பட புகழ் இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடித்து இசையமைத்து வருகின்ற திரைப்படம் வீரன். வினய் ராய்,அதீரா ராஜ், முணிஸ் காந்த், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகின்ற ஜூன் 2 வெளியாகிறது.
இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணன் மின்னல் முரளி படத்துடன் வீரன் படத்தை ஒப்பிட்டு வரும் விமர்சனத்திற்கு பதிலளித்தார் . அதன்படி, இந்த படத்தின் கதையை கடந்த 2017 வருடத்திலே முடித்து விட்டேன். இந்த படத்தை மின்னல் முரளி படத்துடன் ஒப்பிட்டு வரும் விமர்சனத்தை அந்த படத்தின் இயக்குனரிடமும் கலந்து பேசினேன். ஆனால், மின்னல் முரளி படத்திற்கும் வீரன் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முற்றிலும் இது வேற படம். இந்த படத்திற்காக 40க்கும் மேற்பட்ட சி. ஜி சாட்ஸ் பயன்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.