நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
பிரபல கர்நாடக சங்கீத பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ. சினிமாவிலும் நிறைய பாடல்கள் பாடி உள்ளார். குறிப்பாக வசீகரா, முதல் கனவே, ஒன்றா இரண்டா, உயிரே என் உயிரே, பார்த்த முதல் நாளே.... உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை தமிழில் பாடி உள்ளார். அதோடு உள்நாடு, வெளிநாடு என பல நாடுகளிலும் தொடர்ந்து அவர் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் பாம்பே ஜெயஸ்ரீ. அப்போது அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கோமா நிலைக்கு சென்றார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் மெல்ல குணமாகி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், உங்கள் அனைவரது பிரார்த்தனையால் நான் நன்றாக குணமடைந்து வருகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பாம்பே ஜெயஸ்ரீ விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் வழக்கம்போல் சினிமாவில் பாட வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.