சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

பிரபல கர்நாடக சங்கீத பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ. சினிமாவிலும் நிறைய பாடல்கள் பாடி உள்ளார். குறிப்பாக வசீகரா, முதல் கனவே, ஒன்றா இரண்டா, உயிரே என் உயிரே, பார்த்த முதல் நாளே.... உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை தமிழில் பாடி உள்ளார். அதோடு உள்நாடு, வெளிநாடு என பல நாடுகளிலும் தொடர்ந்து அவர் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் பாம்பே ஜெயஸ்ரீ. அப்போது அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கோமா நிலைக்கு சென்றார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் மெல்ல குணமாகி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், உங்கள் அனைவரது பிரார்த்தனையால் நான் நன்றாக குணமடைந்து வருகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பாம்பே ஜெயஸ்ரீ விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் வழக்கம்போல் சினிமாவில் பாட வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.