பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா கடந்த வருடம் பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்தார். அமிதாப்பச்சனுடன் அவர் நடித்த குட்பை மற்றும் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்த மிஷன் மஞ்சு என இரண்டு படங்கள் வெளியானாலும் அவை மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. தற்போது ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் என்கிற படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹிந்தியில் ஒரு பெரிய படத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
ஹிந்தியில் பிரபல தயாரிப்பாளரான ஏக்தா கபூர் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளனர். இந்த படத்தில் தான் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஹிந்தியில் ஏக்தா கபூர் தயாரித்த குட்பை மற்றும் தெலுங்கில் தில் ராஜு தயாரித்த வாராசுடு ஆகிய படங்களில் ராஷ்மிகா நடித்திருப்பதால் இந்த இருவருமே தங்களது படத்திற்கு ராஷ்மிகா பொருத்தமான நபர் என முடிவு செய்து விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.