ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' | ஐதராபாத்தில் ஆரம்பமாகும், நடக்கும் தமிழ் சினிமா…. இதுதான் தமிழ்ப்பற்றா ? |
சமீபத்தில் இயக்குனர் டி.பி.கஜேந்திரன், நடிகர்கள் மயில்சாமி, மனோபாலா ஆகியோர் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். மூவருமே நகைச்சுவை கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் சார்பில் சென்னை தி.நகரில் உள்ள தியாகராயர் அரங்கில் இரங்கல் கூட்டம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளருமான கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன், தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார், நடப்பு தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, நடிகர்கள் டெல்லி கணேஷ், மன்சூரலிகான், பசுபதி, ராஜேஷ், போஸ் வெங்கட், அஜய் ரத்னம், பொன்வண்ணன், உதயா, சரவணன், லியாகத்தலிகான், விக்னேஷ், சிம்ரன், வையாபுரி, நடிகைகள் தேவயானி, ரோகினி, சச்சு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கார்த்தி தவிர முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் பங்கேற்கவில்லை.
நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி “மறைந்த மூவரும் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக இருந்தார்கள். மற்றவர்களுக்கு உதவுவதில் முக்கியமானவர்களாக இருந்தார்கள். குறிப்பாக மயில்சாமி தானத்திற்கு பிறகுதான் தனக்கு என்று கொடை வள்ளலாக வாழ்ந்தார். மரணம் இயற்கையானதுதான் ஆனால் அது இத்தனை சீக்கிரம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும்” என்றார்.