படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
சமீபத்தில் இயக்குனர் டி.பி.கஜேந்திரன், நடிகர்கள் மயில்சாமி, மனோபாலா ஆகியோர் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். மூவருமே நகைச்சுவை கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் சார்பில் சென்னை தி.நகரில் உள்ள தியாகராயர் அரங்கில் இரங்கல் கூட்டம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளருமான கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன், தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார், நடப்பு தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, நடிகர்கள் டெல்லி கணேஷ், மன்சூரலிகான், பசுபதி, ராஜேஷ், போஸ் வெங்கட், அஜய் ரத்னம், பொன்வண்ணன், உதயா, சரவணன், லியாகத்தலிகான், விக்னேஷ், சிம்ரன், வையாபுரி, நடிகைகள் தேவயானி, ரோகினி, சச்சு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கார்த்தி தவிர முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் பங்கேற்கவில்லை.
நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி “மறைந்த மூவரும் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக இருந்தார்கள். மற்றவர்களுக்கு உதவுவதில் முக்கியமானவர்களாக இருந்தார்கள். குறிப்பாக மயில்சாமி தானத்திற்கு பிறகுதான் தனக்கு என்று கொடை வள்ளலாக வாழ்ந்தார். மரணம் இயற்கையானதுதான் ஆனால் அது இத்தனை சீக்கிரம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும்” என்றார்.