பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கிண்டி கவர்னர் மாளிகையில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களின் அம்மாக்களுக்கு அன்னையர் தின சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இதில் வறுமையான சூழ்நிலையில் இருந்து தன் மகளை தனி ஆளாக வளர்த்து நடிகையாக்கிய ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார் நாகமணி அம்மையாருக்கு சிறந்த அன்னை விருதை கவர்னர் ஆர்.என்.ரவியும், அவரது மனைவி லட்சுமி ரவியும் இணைந்து வழங்கினார்கள். இவருடன் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் தாய் என்.நாகலட்சுமி, பாரா ஒலிம்பிக் கிரிக்கெட் வீரர் பொன்ராஜின் தாய் ஞானசுந்தரி, திருநங்கை கிரேஸ் பானுவின் தாய் ஹீனா உள்ளிட்ட 8 பேருக்கு சிறந்த அன்னை விருது வழங்கப்பட்டது.