'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
தமிழில் ராஜா ராணி, நய்யாண்டி, என வெகு சில படங்களில் மட்டுமே நடித்த நஸ்ரியா, நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்தார்... பின்னர் மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் நஸ்ரியா, மலையாளத்தில் பிரித்விராஜுடன் 'கூடே' மற்றும் தனது கணவர் பஹத் பாசிலுடன் இணைந்து 'ட்ரான்ஸ்' ஆகிய படங்களில் நடித்தார். இதை தொடர்ந்து நானி நடித்த 'அண்டே சுந்தரனிகி' என்கிற படம் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார் நஸ்ரியா.
இன்னொரு பக்கம் அவர் படங்களில் நடிக்காத சமயத்தில் கூட சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வந்தார். தன்னை பற்றிய செய்திகள், தனது கணவர் மற்றும் தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஆகியவற்றை, தொடர்ந்து சோசியல் மீடியா மூலம் ரசிகர்களின் பார்வைக்கு கடத்தி வந்தார் நஸ்ரியா. லட்சக்கணக்கான பாலோயர்களை கொண்ட நஸ்ரியா, தற்போது சோசியல் மீடியாவின் அனைத்து தளங்களில் இருந்தும் ஒரு பிரேக் எடுத்துக் கொள்வதாக திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அனைத்து சோசியல் மீடியாக்களில் இருந்தும் பிரேக் எடுத்து கொள்கிறேன். இதுதான் நேரம்.. உங்களுடைய அன்பையும் குறுஞ்செய்திகளையும் இங்கே நான் மிஸ் பண்ணுவேன். மீண்டும் விரைவில் சந்திப்போம். உறுதி அளிக்கிறேன்..” என்று கூறியுள்ளார்.
படங்களில் பிசியாக நடிக்கும் நடிகைகளே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் படம் எதிலும் நடிக்காத நஸ்ரியா இப்படி திடீரென சோசியல் மீடியாவுக்கு தற்காலிகமாக குட்பை சொல்லி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.