'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா |

மேற்கு தொடர்ச்சி மலை, ஆரஞ்சு மிட்டாய், ஆயிரத்தில் ஒருவன், கடல், திரௌபதி, தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆறுபாலா. தற்போது இயக்குனராக மாறி உள்ள ஆறுபாலா 'போர்குடி' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஆர்.எஸ்.கார்த்திக், ஆராதயா உள்பட பலர் நடித்துள்ளனர். படம் வருகிற 25ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது, அதில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை, அதாவது 'போர்குடி' என்று குறிப்பிடப்படும் ஒரு ஜாதியை உயர்த்தி பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து நெல்லையில் நடந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஆறுபாலா விளக்களித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: ஒரு நல்ல நோக்கத்திற்காத்தான் வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று அது தவறாக பயன்படுத்தப்படுவதால் இரு சமூக மக்களுமே பாதிக்கப்படுகிறார்கள். நிறைய இழப்புகளை சந்திக்கிறார்கள். அதைப் பற்றித்தான் இந்த படம் பேசுகிறதே தவிர எந்த ஜாதியை உயர்த்தியும், எந்த ஜாதியை தாழ்த்தியும் பேசவில்லை. ஆதிக்க சாதி. அதிகார வர்க்கம் என்ற குற்றச்சாட்டுகளை வைத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை மேலும் பாதாளத்திற்கு தள்ளும் முயற்சியை பற்றி பேசுகிறது. அனைத்து சமூகமும் தங்களுடைய இழப்புகளை திரையில் காட்டி தங்களுடைய நியாயத்தை புரிய வைக்க எடுக்கும் முயற்சி போல் இந்த சமூகத்திற்கான இழப்புகளையும் நியாயத்தையும் புரிய வைக்கும் முயற்சி இது. என்றார்.