பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தி சினிமா ஆகிறது. தங்கள் கிராமத்தில் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்குவதால் பல ஆண்டுகள் தீபாவளிக்கு பட்டாசு கொழுத்தாத கிராமத்தை போன்று தங்கள் ஊர் மின்சார கம்பத்தில் ஒரு அபூர்வ வெளிநாட்டு பறவை கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறிக்க முயற்சித்தபோது அந்த பறவை குஞ்சு பொறித்து தன் குஞ்சுகளுடன் அது பறந்து செல்லும் வரை மின்சாரத்தை பயன்படுத்தாமல் காத்திருந்த கிராம மக்க்கள் பற்றிய செய்தியும் வந்தது. இந்த செய்தியை 'கூடு' என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாக்குகிறார்கள்.
இந்த படத்தை ஸ்கைமூண் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் ஜோயல் விஜய் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிர்நேசத்தை சொல்லும் இந்த படம் காமெடி, செண்டிமென்ட் கலந்த கிராமத்து படமாக தயாராக இருக்கிறது.