இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் | கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! | ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்! | 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! |

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தி சினிமா ஆகிறது. தங்கள் கிராமத்தில் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்குவதால் பல ஆண்டுகள் தீபாவளிக்கு பட்டாசு கொழுத்தாத கிராமத்தை போன்று தங்கள் ஊர் மின்சார கம்பத்தில் ஒரு அபூர்வ வெளிநாட்டு பறவை கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறிக்க முயற்சித்தபோது அந்த பறவை குஞ்சு பொறித்து தன் குஞ்சுகளுடன் அது பறந்து செல்லும் வரை மின்சாரத்தை பயன்படுத்தாமல் காத்திருந்த கிராம மக்க்கள் பற்றிய செய்தியும் வந்தது. இந்த செய்தியை 'கூடு' என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாக்குகிறார்கள்.
இந்த படத்தை ஸ்கைமூண் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் ஜோயல் விஜய் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிர்நேசத்தை சொல்லும் இந்த படம் காமெடி, செண்டிமென்ட் கலந்த கிராமத்து படமாக தயாராக இருக்கிறது.