20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தி சினிமா ஆகிறது. தங்கள் கிராமத்தில் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்குவதால் பல ஆண்டுகள் தீபாவளிக்கு பட்டாசு கொழுத்தாத கிராமத்தை போன்று தங்கள் ஊர் மின்சார கம்பத்தில் ஒரு அபூர்வ வெளிநாட்டு பறவை கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறிக்க முயற்சித்தபோது அந்த பறவை குஞ்சு பொறித்து தன் குஞ்சுகளுடன் அது பறந்து செல்லும் வரை மின்சாரத்தை பயன்படுத்தாமல் காத்திருந்த கிராம மக்க்கள் பற்றிய செய்தியும் வந்தது. இந்த செய்தியை 'கூடு' என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாக்குகிறார்கள்.
இந்த படத்தை ஸ்கைமூண் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் ஜோயல் விஜய் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிர்நேசத்தை சொல்லும் இந்த படம் காமெடி, செண்டிமென்ட் கலந்த கிராமத்து படமாக தயாராக இருக்கிறது.