'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய வெற்றி பெற்றது. இரண்டாம் பாகத்தில் அப்படி இல்லை என்றாலும் 'வீரா ராஜ வீரா' என்ற பாடல் அனைவரையும் கவர்ந்தது. தற்போது இந்த பாடல் எங்கள் மெட்டு என்று இந்துஸ்தானி இசை கலைஞர் உஸ்தாத் வசிபுதீன் தாகர் என்பவர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், இயக்குனர் மணிரத்னத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அவர் அனுப்பிய நோட்டீசில், இந்த பாடலை தனது குடும்பத்தினர் 'அதன' ராகத்தில் உருவாக்கி இருந்தார்கள். 1978ம் ஆண்டு இந்த பாடலை ஹாலந்தில் நடந் இசை நிகழ்ச்சியில் அரங்கேற்றினார்கள். எங்கள் குடும்பத்தின் அனுமதி பெறாமல் இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தி உள்ளார். என்று குறிப்பிட்டுள்ளர்.
இதற்கு மணிரத்னம் சார்பில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் பதிலளித்துள்ளது. அந்த பதிலில், 'வீரா ராஜ வீரா' பாடல் 13-ம் நூற்றாண்டில் நாராயண பண்டிதசாரியால் இயற்றப்பட்ட இசையைத் தழுவி எடுக்கப்பட்டது. இது அனைவருக்கும் பொதுவானது. மேலும், இப்பாடல் 'த்ருபத்' இசைப்பாணியில் இயற்றப்பட்டது. விளம்பர, லாப நோக்கத்துக்காக உஸ்தாத் வசிபுதின் தாகர் பொன்னியின் செல்வன் படக்குழு மீதும், ஏ.ஆர்.ரஹ்மான் மீதும் புகார் அளித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.