கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

தெலுங்கு திரையுலகில் நடிகர் நாகார்ஜுனாவின் மகனான இளம் நடிகர் நாக சைதன்யா தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள கஸ்டடி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, இளையராஜா-யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப்படம் வரும் மே 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை துவங்கியுள்ளனர். குறிப்பாக நாகசைதன்யா இந்த படம் தொடர்பாக யு-டியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்
தமிழில் இர்பான் வியூ என்கிற ஒரு யு-டியூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்தபோது, அவரிடம் இரண்டரை வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்த பின்னர், நட்பாக இருப்போம் என அவரது மனைவி கூறியது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நாகசைதன்யா பிரிவோம் என முடிவு செய்து பிரிந்த பின்னர் எதற்காக நண்பர்களாக இருக்க வேண்டும்..? பிரிந்த பின் நண்பர்களாக தொடர்வோம் என்று கூறும் வார்த்தையே என்னை அதிகம் கடுப்படிக்கிறது அப்படி ஒரு நட்பு தேவையில்லை” என்று பதில் அளித்துள்ளார்.