ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தெலுங்கு திரையுலகில் நடிகர் நாகார்ஜுனாவின் மகனான இளம் நடிகர் நாக சைதன்யா தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள கஸ்டடி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, இளையராஜா-யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப்படம் வரும் மே 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை துவங்கியுள்ளனர். குறிப்பாக நாகசைதன்யா இந்த படம் தொடர்பாக யு-டியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்
தமிழில் இர்பான் வியூ என்கிற ஒரு யு-டியூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்தபோது, அவரிடம் இரண்டரை வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்த பின்னர், நட்பாக இருப்போம் என அவரது மனைவி கூறியது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நாகசைதன்யா பிரிவோம் என முடிவு செய்து பிரிந்த பின்னர் எதற்காக நண்பர்களாக இருக்க வேண்டும்..? பிரிந்த பின் நண்பர்களாக தொடர்வோம் என்று கூறும் வார்த்தையே என்னை அதிகம் கடுப்படிக்கிறது அப்படி ஒரு நட்பு தேவையில்லை” என்று பதில் அளித்துள்ளார்.