தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா |
2016ல் வெளியான பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை மிர்னா மேனன். அந்த படத்தில் நடித்த நடிகர் அபி சரவணனுடன் காதல் விழுந்து அவரை திருமணம் செய்ததாகவும் கூறப்பட்டது. அவருடன் ஒன்றாக வசித்து பின்னர் பிரிந்து பரபரப்பை ஏற்படுத்திய மிர்னா மேனன், அதன் பிறகு சில வருடங்கள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார். திடீரென மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக சித்திக் இயக்கத்தில் வெளியான பிக் பிரதர் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. ஆனாலும் அந்த படம் கைகொடுக்காத நிலையில் மீண்டும் ஒரு இடைவெளி விழுந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான புர்கா என்கிற படத்தின் கதாநாயகியாக நடித்த மிர்னா மேனனுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்த நிலையில் தெலுங்கில் அவர் அல்லரி நரேஷுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்துள்ள உக்ரம் என்கிற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதற்கெல்லாம் சிகரம் வைப்பது போல நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மிர்னா மேனன். கிட்டத்தட்ட 40 நாட்கள் இவரது காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதால் ஜெயிலர் படம் வெளியான பின்னர் தமிழ் சினிமாவில் தனக்கான அங்கீகாரம் நிச்சயம் தேடி வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் மிர்னா மேனன்.