யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் | நாகசைதன்யா - சோபிதா குறித்து அவதூறு : மகளிர் ஆணையத்தில் மன்னிப்பு கேட்ட ஜோதிடர் | இரண்டு வருடம் முடிவதற்குள்ளேயே விவாகரத்தை அறிவித்த அபர்ணா வினோத் | ஜன., 26ல் விஜய் 69 முதல் பார்வை வெளியாக வாய்ப்பு | ஹனிரோஸ் புகாரில் சிறை சென்ற செல்வந்தருக்கு உதவி செய்த ஜெயில் அதிகாரிகள் சஸ்பெண்ட் | தனது அநாகரிக செயலுக்கு மன்னிப்பு கேட்ட ஜெயிலர் வில்லன் |
பாலிவுட்டின் சீனியர் நடிகர்களில் ஒருவரான அனில் கபூர், 'பொன்னியின் செல்வன் 2' படத்தைப் பார்த்து மனம் திறந்து பாராட்டியுள்ளார். மும்பையில் படத்தைப் பார்த்த பின் இயக்குனர் மணிரத்னம், அவரது மனைவி சுஹாசினி மணிரத்னம் ஆகியோரை சந்தித்துப் பேசிய புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். ஹிந்தியில் இப்படத்திற்காக ஆரம்ப அறிமுகக் காட்சிக்கான பின்னணிக் குரலை அனில் கபூர் தான் கொடுத்திருந்தார்.
“மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் 2' பார்ப்பது ஒரு உற்சாகமான அனுபவம். பிடிப்பான நாடகம், மயக்கும் இசை, காவியமான படைப்பு ஆகியவை ஆரம்பத்திலிருந்தே என்னைக் கவர்ந்தன. மிகச் சிறப்பாக நடித்த விக்ரமிற்கு சத்தம் போட்டு ஒரு பாராட்டு, வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயின் அற்புதமான நடிப்பு.
ஏஆர் ரஹ்மானின் இசை படத்தை காவிய அளவிற்கு தூக்கியுள்ளது. எனது நண்பன் ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்தின் ஹைலைட். ஆடை அலங்காரத்தில் ஏகலகானி அசத்தியுள்ளார். 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் நானும் சிறு பங்காக இருப்பது எனக்குப் பெருமையும், மரியாதையும். ஒரு நிஜமான மாணிக்கத்தைத் தந்த மணிரத்னம் மற்றும் மொத்த குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்குனராக அறிமுகமான 'பல்லவி அனு பல்லவி' கன்னடப் படத்தின் கதாநாயகன் அனில் கபூர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.