'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
பாலிவுட்டின் சீனியர் நடிகர்களில் ஒருவரான அனில் கபூர், 'பொன்னியின் செல்வன் 2' படத்தைப் பார்த்து மனம் திறந்து பாராட்டியுள்ளார். மும்பையில் படத்தைப் பார்த்த பின் இயக்குனர் மணிரத்னம், அவரது மனைவி சுஹாசினி மணிரத்னம் ஆகியோரை சந்தித்துப் பேசிய புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். ஹிந்தியில் இப்படத்திற்காக ஆரம்ப அறிமுகக் காட்சிக்கான பின்னணிக் குரலை அனில் கபூர் தான் கொடுத்திருந்தார்.
“மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் 2' பார்ப்பது ஒரு உற்சாகமான அனுபவம். பிடிப்பான நாடகம், மயக்கும் இசை, காவியமான படைப்பு ஆகியவை ஆரம்பத்திலிருந்தே என்னைக் கவர்ந்தன. மிகச் சிறப்பாக நடித்த விக்ரமிற்கு சத்தம் போட்டு ஒரு பாராட்டு, வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயின் அற்புதமான நடிப்பு.
ஏஆர் ரஹ்மானின் இசை படத்தை காவிய அளவிற்கு தூக்கியுள்ளது. எனது நண்பன் ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்தின் ஹைலைட். ஆடை அலங்காரத்தில் ஏகலகானி அசத்தியுள்ளார். 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் நானும் சிறு பங்காக இருப்பது எனக்குப் பெருமையும், மரியாதையும். ஒரு நிஜமான மாணிக்கத்தைத் தந்த மணிரத்னம் மற்றும் மொத்த குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்குனராக அறிமுகமான 'பல்லவி அனு பல்லவி' கன்னடப் படத்தின் கதாநாயகன் அனில் கபூர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.