சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பாலிவுட்டின் சீனியர் நடிகர்களில் ஒருவரான அனில் கபூர், 'பொன்னியின் செல்வன் 2' படத்தைப் பார்த்து மனம் திறந்து பாராட்டியுள்ளார். மும்பையில் படத்தைப் பார்த்த பின் இயக்குனர் மணிரத்னம், அவரது மனைவி சுஹாசினி மணிரத்னம் ஆகியோரை சந்தித்துப் பேசிய புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். ஹிந்தியில் இப்படத்திற்காக ஆரம்ப அறிமுகக் காட்சிக்கான பின்னணிக் குரலை அனில் கபூர் தான் கொடுத்திருந்தார்.
“மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் 2' பார்ப்பது ஒரு உற்சாகமான அனுபவம். பிடிப்பான நாடகம், மயக்கும் இசை, காவியமான படைப்பு ஆகியவை ஆரம்பத்திலிருந்தே என்னைக் கவர்ந்தன. மிகச் சிறப்பாக நடித்த விக்ரமிற்கு சத்தம் போட்டு ஒரு பாராட்டு, வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயின் அற்புதமான நடிப்பு.
ஏஆர் ரஹ்மானின் இசை படத்தை காவிய அளவிற்கு தூக்கியுள்ளது. எனது நண்பன் ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்தின் ஹைலைட். ஆடை அலங்காரத்தில் ஏகலகானி அசத்தியுள்ளார். 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் நானும் சிறு பங்காக இருப்பது எனக்குப் பெருமையும், மரியாதையும். ஒரு நிஜமான மாணிக்கத்தைத் தந்த மணிரத்னம் மற்றும் மொத்த குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்குனராக அறிமுகமான 'பல்லவி அனு பல்லவி' கன்னடப் படத்தின் கதாநாயகன் அனில் கபூர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.