போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் வெந்து தணிந்தது காடு. சித்தி இட்னானி நாயகியாக நடித்தார். முக்கிய வேடத்தில் ராதிகா நடித்தார். ஐசரி கணேசனின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த படத்தின் கிளைமாக்ஸில் இரண்டாம் பாகம் உருவாகும் என்று குறிப்பிட்டு இருந்தார் கவுதம் மேனன்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் கூறுகையில், ‛‛வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை கவுதம் மேனன் எழுதி வருகிறார். அதனால் அவர் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்ததும் அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு சிம்புவும் ஆர்வமாக இருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.